Ōpōtiki இல் Mongrel Mob Barbarians தலைவர் ஸ்டீவன் தையாட்டினியை கொலை செய்ததாக 50 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் 9 ஆம் திகதி ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு, Ōpōtiki இல் உள்ள Saint John தெருவில் ஒரு வாகனத்தில் தாக்கப்பட்டதில் தையாடினி கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று Whakatāne மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

செய்தி நிருபர் - புகழ்