வாரயிறுதியில் Kerikeri இல் மதுக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுவன் உட்பட நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

மூத்த சார்ஜென்ட் பீட்டர் ராபின்சன் கூறுகையில், சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் Kerikeri வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானக்கடைக்கு வெளியே நான்கு பேர் வந்தனர்.

அவர்களில் ஒருவர் கடை உஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டினார், மேலும் இருவர் கடையை சூறையாடி, சிகரெட் மற்றும் மதுபான பாட்டில்களை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை Wiroa சாலையில் பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 41, 28, 25 மற்றும் 15 வயதுடைய நால்வர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக ராபின்சன் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்