வடக்கு ஒடாகோவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக வெளியேற்றப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் இன்று மாலை வீடு திரும்ப முடியும் என்று தீயணைப்பு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர்.

நேற்று காலை மிடில்மார்ச் அருகே Nenthorn இல் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயை அடுத்து, உடனடியாக 35 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு குழுவினர் இரவு முழுவதும் தீயை கண்காணித்து, தீயை அணைத்தனர்.

தீயில் எந்த வீடுகளும் சேதமடையவில்லை, ஆனால் சிறிய எண்ணிக்கையிலான பண்ணை கட்டிடங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.

மேலும் 78 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தீயில் கருகின. மூன்று வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நெந்தோர்ன், Nenthorn, Ramrock மற்றும் Butter and Egg சாலைகள் மூடப்பட்டுள்ளன, ஆனால் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்