Dunedin இல் உயிரிழந்த குர்ஜித் சிங்க் என்ற 27 வயது இளைஞனின் மரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 33 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குர்ஜித் சிங்க் தொலைத்தொடர்பு நிறுவனமான கோரஸின் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்துள்ளார்.

ஜனவரி 29, திங்கட்கிழமை Dunedin இல் Hillary தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது மரணம் தொடர்பில் இன்று காலை, 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று Dunedin மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒரு பெரிய புலனாய்வாளர்கள் குழு இந்த வழக்கில் விரிவாக பணியாற்றியுள்ளது, ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலை நிறைய உள்ளது என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கல்லும் க்ரூடிஸ் கூறினார்.

மேலும் இந்த விசாரணையில் உதவிய சமூகத்திற்கு குரூடிஸ் நன்றி தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்