ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Manurewa வில் நேற்று முன்தினம் நபர் ஒருவரை கடுமையாக தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாக்கிய  இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை 6 மணியளவில் ஒரு பலசரக்குக் கடைக்குள் நடந்த இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் Middlemore மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்