Northland இல் வாகனம் மோதுண்டு படுகாயமடைந்த 20 மாத பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் Kaitaia வில் ஒருவர் முகவரியில் இருந்து புறப்பட்ட வாகனத்தில் குழந்தை மோதுண்டதாக கூறப்படுகிறது.

குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை Kaitaia மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கெவன் வெர்ரி கூறினார்.

இதனையடுத்து குழந்தை ஆபத்தான நிலையில் ஆக்லாந்தின் ஸ்டார்ஷிப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் இன்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்