கிறிஸ்மஸ் தினத்தன்று Kaikōura வில் உள்ள ஒரு உணவகத்தில் பணத்தை திருடியதாக கூறப்படும் நபரை அடையாளம் காண நெல்சன் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

டிசம்பர் 25ம் திகதி நள்ளிரவு குறித்த உணவகத்தில் இருந்து 750 டொலர்கள் மதிப்புள்ள பணம்  திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அவர் பழுப்பு நிற முடியுடன் சுமார் 182 சென்டிமீட்டர் உயரம் மற்றும் சராசரியான உருவம் கொண்டவர் என்று விவரிக்கப்படுகிறார்.

இந்நிலையில் அந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்