Canterbury இல் உள்ள Purau Bay இல் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிய மலையேறும் நால்வர் நேற்று மாலை கடலோர காவல்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மலையேறுபவர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த தீ பரவல் தொடர்பில் நேற்று மாலை 4.26 மணியளவில் தகவல் வழங்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் நியூசிலாந்து தெரிவித்துள்ளது. 

இந்த காட்டுத் தீ, 100 மீட்டர் வரை பரவியது.  தரையில் இருந்த மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு உதவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்