புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் தெற்கு ஆக்லாந்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் Manurewa வில் உள்ள, Addington Ave இல் வாகனத்தில் இருந்த 19 மற்றும் ‌17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்டனர்.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 19 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயது இளைஞன் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்றைய தினம் ஒரு காட்சி பரிசோதனை முடிந்ததாக Counties Manukau CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கரேன் பிரைட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் கவனம் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதில் உள்ளது.

இது சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம், இருப்பினும் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகத் தோன்றுகிறது என்பதை நாங்கள் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதி மாலை முதல் ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 3.30 மணி வரை, Addington Ave பகுதியில் இருந்த எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்