Northland இல் இடம்பெற்ற விபத்தில் ஆறு மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்றைய தினம் மாலை 6.20 மணியளவில் தெற்கு Hokianga வில் உள்ள  Waimā Valley சாலையில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் ஆறு மாத ஆண் குழந்தை உட்பட நால்வர் இருந்ததாக கூறப்படுகிறது ‌

அவர்களது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த சரளை சாலையில் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தீவிர விபத்து பிரிவு ஆய்வாளர் ஜெஃப் கிராம்ப் தெரிவித்தார்.

வாகனத்தில் இருந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் ஒரு நபர் - பல்வேறு காயங்களுக்கு ஆளானார்கள்.  பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி, மோசமாக காயமடைந்த கைக்குழந்தையுடன் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் Rāwene மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை இறந்துவிட்டதாக கிராம்ப் கூறினார்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்