ஒடாகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஒடாகோவின் மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது.

Alexandra விற்கு அருகிலுள்ள Fruitlands என்ற இடத்தில் இன்று நண்பகல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்தனர்.

முடிந்தால் அப்பகுதியில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்