Coromandel Peninsula கடற்கரை நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Russek சாலைக்கு அருகில் இன்று அதிகாலை 3.25 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கார் மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த நீர் நிலையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 25, Coromandel நகரின் தெற்கே உள்ள Kereta விற்கு அருகில், மூடப்பட்டது.

ஆனால் பிற்பகலில் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக போக்குவரத்து முகமையின் இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தீவிர விபத்து பிரிவு பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்