சயனோபாக்டீரியா அளவு கணிசமாக உயர்ந்துள்ள அடுத்து வைகாடோவில் உள்ள Ngā Roto ஏரிக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகாடோவில் இதுவரை ஆறு ஏரிகளுக்கு இவ்வாறு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ரிச்சர்ட் விபோண்ட் கூறுகையில், 

பாசிகள் பாதிக்கப்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சயனோபாக்டீரியா நச்சுகள் ஆஸ்துமா, தோல் தடிப்புகள், வயிற்று உபாதைகள் அல்லது நரம்பியல் விளைவுகளை ஏற்படுத்தும்.

நாய்கள் குறிப்பாக உணர்திறன் கொண்டவை. எனவே அவற்றை அந்த தண்ணீரை குடிக்கவோ அதில் நீந்தவோ அனுமதிக்கக்கூடாது.

இதனிடையே பாதகமான விளைவுகளை அனுபவிக்கும் எவரும் 07 838 2569 என்ற எண்ணில் வைகாடோ பொது சுகாதார சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

Lakes Rotoroa (Hamilton Lake), Hakanoa, Whangape, Waikare ம Kainui ஆகியவை பாதிக்கப்பட்ட மற்ற ஏரிகள்.