இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மத்திய வெலிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே சுமார் 80 பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பிராண்டன் தெருவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலஸ்தீன கொடியை ஏந்திய வண்ணம் "உங்கள் கைகளில் இரத்தம்" என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து கோஷம் எழுப்பிய அவர்கள் மதியம் 1 மணிக்கு பின்னர் அந்த குழுவினர் தாங்களாகவே கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்