இலங்கை

சுவிற்சர்லாந்து, இலங்கைக்கான நேரடி விமான சேவையை நேற்றைய தினம் (03) ஆரம்பித்துள்ளது.

இத்தகவலை இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி சுவிற்சர்லாந்தில் இருந்து நேற்றைய தினம் காலை 221 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச 
விமான நிலையத்தில் தரையிறங்கியது.