இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க வெலிமடைக்குச் பயணம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.