வெலிங்டன் நீர்முனையில் இன்று பிற்பகல் ஒரு ‌குட்டி சீல் (நீர் நாய்) தூங்கிக் கொண்டிருந்த‌ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த குட்டி சீல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுற்றுலாப் பயணிகள், மதிய உணவு நேரத்தில் வெளியில் இருப்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் அதனை அருகில் கண்டு மகிழ்ந்ததுடன் அனைவரும் அதை புகைப்படம் எடுத்தனர்.

பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, பொதுவாக சீல் குட்டிகள் தங்கள் தாயிடமிருந்து பால் அருந்துவதை நிறுத்த ஆரம்பிக்கும் போது, ​​ஜூலை முதல் செப்டம்பர் வரை நியூசிலாந்து கடற்கரைகளில் இவை காணப்படும் என‌ கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்