கடந்த மாதம் ஆக்லாந்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை பொலிஸார் இன்று காலை வெளியிட்டனர்.

பொலிஸாரின் அறிக்கைப்படி, Northcote இல் உள்ள Sylvan Avenue வில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் ஏப்ரல் 29 சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், புகைப்படத்தில் இருக்கும் நபரை தேடி வருவதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த எவரும் சந்தேகத்திற்குரிய அல்லது அசாதாரணமான நடத்தை எதையும் கண்டிருந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.