ஆக்லாந்தில் 18 வயது இளைஞனும் அவரது நாயும் வார காணாமல் போனதை அடுத்து, ஆக்லாந்து கடற்கரையின் கரையோரத்தில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணிகளை தொடங்கியுள்ளன.

டேனியல் கெல்லி என்ற குறித்த இளைஞர் நேற்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவரது வாகனம் Kariotahi கடற்கரை அருகில் இருந்ததை அடுத்து அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது.

கடலோர காவல்படை இன்று வான்வழி தேடுதலை மேற்கொள்ளும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நேற்றைய தினம் கெல்லி அல்லது அவரது சிறிய வெள்ளை நாயைப் பார்த்த எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.

காவல்துறை மற்றும் டேனியலின் குடும்பத்தினர் அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் அவரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.