தெற்கு ஆக்லாந்தில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Takanini இல் அமைந்துள்ள  Burger King துரித உணவகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் Takanini இல் உள்ள Great South வீதியில் அமைந்துள்ள குறித்த Burger King உணவகத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

குற்றவாளி இரண்டு ஊழியர்களை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

காயமடைந்த இரு ஊழியர்கள் Middlemore மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நாங்கள் குற்றவாளியை விரைந்து கைது செய்துள்ளோம், மேலும் இந்த நபரை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம் என்பதை உறுதியளிக்கிறோம் என கவுண்டிஸ் மானுகாவ் CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் Tofilau Fa' amanuia Va'aelua கூறினார்.