கடந்த மாதம் ஆக்லாந்தில் உள்ள Clevedon இல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மார்ச் 16 அன்று மதியம் 2.37 மணியளவில் Clevedon வீதியில் நிகழ்ந்தது என்று பொலிஸார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று காலை Manurewa மற்றும் Takanini புறநகர்ப் பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் பின்னர் 27 வயதுடைய பெண்ணும் 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் BB வகை துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர். 15 வயது சிறுவன் அடுத்த வாரம் Manukau இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 27 வயதான பெண் iwi சமூக குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.