கடந்த வெள்ளிக்கிழமை இரவு Kaitaia வில் வாகனம் மோதுண்டு பாதசாரி உயிரிழந்த பயங்கரமான விபத்து தொடர்பில் Far North பொலிசார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

55 வயதுடைய குறித்த பெண் நாளை Kaitaia மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த தினத்தன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு வரை அப்பகுதியில் இருந்தவர்கள் அல்லது விபத்து தொடர்பில் சிசிடிவி காட்சிகள் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.