கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக இலங்கை அரசு அறிவித்ததை பின்வாங்கிமைக்காக இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்டாய தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைப் பார்ப்பது ஏமாற்றமளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

ஒரு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்கு அதிக மரியாதை பெற வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.