பிரதமர் மோடி நாளை (11) தமிழகம் வரவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும்  மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பிரதமர் மோடி  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இளையராஜா இதற்கு முன்னதாக இரண்டு முறை கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.