மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.

இப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

மேலும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு சார்பாக கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதியை மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் வழங்கியுள்ளார்கள்.