இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ,மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல் முதலானவையும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் ,இம்முறை சாதாரண தரப்பரீட்சை அடுத்த மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.