ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவியில் இருந்து மகிந்த ராஜக்ஷவை அகற்றி அப்பதவியை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என விமல் வீரவங்ச, லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தெரிந்து கொள்ள வேண்டும், இது அவரின் கட்சியும் இல்லை. எமது கட்சி விடயத்தில் தலையிடவும் உரிமை இல்லை என்பதை.

இந்த கருத்தை கூறியது தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைபட்டிலேயே நாம் உள்ளோம்.

அவர் தனது அறிக்கையை உடனடியாக வாபஸ் பெறுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு விடுத்தார்.