நாளை (9) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் நடாத்தப்படவிருக்கின்ற எழுமாறான பிசிஆர் பரிசோதனைக்கு முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திணைக்களத்தின் பூரண ஆதரவுடன் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற மற்றும் இடம்பெறாத காலங்களிலும் வாரத்திற்கு ஒரு தடவை இந்த பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2021 ஜனவரி 13ஆம் திகதி முதல் பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பி சி ஆர் பரிசோதனை வேலைத்திட்டத்தின் கீழ், இறுதியாக கடந்த 25ஆம் தேதி 190 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.