மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், டிரிடென்ட் ஓட்டல், காமா மருத்துவமனை என பல இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேரும் பயங்கரவாதிகள் 9 பேரும் கொல்லப்பட்டனர். இதில் கைதான அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேரும் பயங்கரவாதிகள் 9 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத் உல் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையது, ஜாகீர் உர் ரஹ்மான், ஷாஜித் மிர் உள்ளிட்ட தீவிரவாதிகளே மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஷாஜித் மிர் ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த சூழலில், இறந்ததாக கூறப்பட்ட ஷாஜித் மிர்ரை பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் கைது செய்தது. தீவிரவாத இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். கராச்சி நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

iஷாஜித் மிர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை திரட்டிய இந்திய உளவு அமைப்பு இந்தியா சர்வதேச தளங்களில் வெளியிட்டால், தீவிரவாத நிதி வழங்கல் தடுப்புப் படையின் தடை பட்டியலில் இருந்து வெளிவர முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே ஷாஜித் மிர்ரை அவசர அவசரமாக பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.