வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில்  தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி ஜிப்ரிக்கோவின் வீட்டின்மேல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  ஜிப்ரிக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இளவாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் தாக்குதலுக்குள்ளான அவரது குடும்பத்தினர் அனைவரும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரது ஒரு சகோதரியும் தந்தையும் தாயும் மல்லாகம் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்  ஜிப்ரிக்கோவின் வீட்டிற்கு சென்ற வாள்வெட்டு கும்பல் ஒன்று அவரது உடமைகளை சேதமாக்கியதுடன், செல்லமாக வளர்த்த கிளியையும் வெட்டி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிப்ரிக்கோவின் வீட்டில் தாக்குதல் நடாத்திய அதே பகுதியை சேர்ந்த மூவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.