யால சரணாலயத்தில்  யானையொன்றை ஜீப்  சாரதிகள் துன்புறுத்திய சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீப் வண்டிகள் வெளிநாட்டு உள்நாட்டு பயணிகளுடன்  பயணித்துக்கொண்டிருந்த பாதையில் தென்பட்ட யானையை சாரதிகள் துன்புறுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யானை அந்த பாதையில் தென்பட்டதும் அதனை வழமை போல செல்வதற்கு அனுமதிப்பதற்கு பதில் ஜீப்சாரதிகள் ஒலிஎழுப்பியுள்ளனர்.

யானையின் பாதையை பல ஜீப்கள் மறித்துக்கொண்டு நிற்பதை காண்பிக்கும் வீடியோக்கள்வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக  மிகவும் ஆபத்தான சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யானை ஜீப்பினை நோக்கி வந்ததும் அதனை துரத்துவதற்காக பட்டாசுகளை வெடிக்கச்செய்வதை காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

சண்டோ என்ற யானையையே ஜீப்சாரதிகள் துன்புறுத்தியுள்ளனர் - கடந்த வருடமும் இந்த சம்பவம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.