திருகோணமலை கண்டி பிரதான வீதியில் முள்ளிப்பொத்தானை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தம்பலகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும்,மாத்தளையில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சீமெந்து லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.