ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர வினால் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (27) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பார் எனவும், ஜனாதிபதி அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதியின் புதிய செயலாளராகப் பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக் கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.

இதேவேளை, பி.பி. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பி. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அப்போது பி.பி. ஜயசுந்தரவை பொருளாதார கொலையாளியாக என அடையாளப்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.