வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அசன்பாவா வீதி பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான படகு சாரதி (ஸ்கீப்பர்) எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் திடீரென இரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படகில் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் சென்றவர்கள் மீண்டும் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு சடலமாக கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.