2004 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய ஆழிப்பேரலை தாக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதன் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஆசிய நாடுகளில் 2இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது.

இலங்கையில் 30,196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டதுடன் 21,411 பேர் காயமடைந்தனர்.

500,000க்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று(26) காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.