பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இந்த யோசனையை முன்வைத்திருந்தார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இந்த உதவிதொகையை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.