ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி யின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இஸ்லாமியத் தீவிரவாத செயற்பாட்டாளர்களால் படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது என்று பேராசிரியர் நந்தன விஜேசிங்க உள்ளிட்ட செயலணி உறுப்பினர்கள் தினக்குரலுக்கு தெரிவித்தார்கள்.

செயலணியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை. இது குறித்து வினவியபோது இவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:

செயலணியில் இருந்து விலக வேண்டும், இதன் செயற்பாடுகளில் பங்கேற்கக் கூடாது என்று கடுமையாக அச்சுறுத்தப்பட்டு இருப்பதாக எமக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் அறியத் தந்துள்ளனர். உயிர் அச்சம் காரணமாக அவர்கள் வரவில்லை.

செயலணியின் தலைவர் ஞானசார தேரருக்கும் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுதான் உள்ளன. ஆனால் அவர் பயப்படவே இல்லை. வைராக்கியமானவராக உள்ளார். சவால்களை நேரடியாக சந்திக்கத் தயாராகவே உள்ளார். ஆனால் நாம் அவருக்கான பாதுகாப்பில் கூடுதலான கவனம், அக்கறை ஆகியவற்றுடன் உள்ளோம்.