நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப் படும் இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு விசேட செயலணியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்றைய தினம் உரையாற்றும் போது நாட்டில் கொரோனா மரணங்களைத் தொடர்ந்தும் குறைப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிர தேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்