எலுவன் குளம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஊடாக 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறுவார்கள் அவ்வாறு உதவியைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் குறித்த கழகத்திற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிலையில் இதற்கு பங்களிப்புச் செய்த மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினரான திருமதி அண்டனி ஜேசு இதா சுகன்யா, மற்றும் இதற்கான உதவிகளை புரிந்த கழகத்தின் எழுவன்குள இணைப்பாளர் திரு சதீஷ்,பொருளாளர் திரு பிருந்தாவனம் அவர்களுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளது.