வீரகெட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரகெட்டிய - வேகந்தவல பகுதியில் வசித்து வந்த 14 வயதான சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.