மீண்டும் அச்சுறுத்தலான நிலையொன்றை நோக்கி நகர்கின்றோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது  என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களே அதிகளவில் தொற்றுக்குள்ளாகின்றனர் என்றும் கூறியுள்ளார். நாட்டில் மீண்டும் கோவிட் -19 வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

கடந்தவாரத்தில் இருந்து தற்போது வரையிலான தரவுகளின் படி, வரைபில் உயர்வு நிலையொன்றை காட்டுகின்றது என்றும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றமையே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.