நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.