டயகமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் பொரளை காவல்நிலையத்தில் வைத்து ரிஷாட்டின் மனைவி, அவரது தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.