எதிர்வரும் 24ஆம் திகதி பூமியை நோக்கி இராட்சத எரிகல் வருவதாகவும், இருப்பினும் அதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விண்கல் ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக உள்ளதாம்.அந்த கல்லுக்கு 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டுள்ளனர்.

விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம். 

அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். 

இந்நிலையில் பூமிக்கு அருகில் வரும் குறித்த விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது. எனவே புவி ஈர்ப்பு விசைக்குள் அது வராது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.