நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எந்த சமூக வலைதளத்திலும் தனக்கு கணக்கு இல்லை என்றும் கூறினார். இந்நிலையில் அவர் புகார் அளித்த 30 நிமிடத்தில் போலி டிவிட்டர் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.