வைஹேக் தீவில் உள்ள கடற்கரையில் ஒரு நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்று காலை 8.20 மணியளவில் போலீசார் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து தேடல் மற்றும் மீட்பு பணியாளர்களின் உதவியுடன் இன்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் கொரோனருக்கு பரிந்துரைக்கப்பட்டு முறையான அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.