'சைனோபாம்' தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது 'டோஸ்' வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.