வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (01) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.