கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.

கொலம்பியா நாட்டின் பொலிவர் நகருக்கு தெற்கே கேன்டகல்லோ பகுதியில் போதை ஒழிப்பு பிரிவு போலீசார் பயணம் செய்த ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியை போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டு அதிபர் இவான் டக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொலம்பியா நாட்டு போலீசில் 5 வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வேதனை தெரிவிக்கின்றேன்.

நம்முடைய நாட்டிற்காக எதனையும் விட்டு கொடுக்கும் நமது வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாம் இருப்போம் என தெரிவித்து உள்ளார்.