பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் பேருந்து ஒன்று காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபர்பாத் நகருக்கு அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சீரற்ற சாலைகளும், போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்காததும், கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதுமே விபத்துக்கு காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.